Ninaithu Ninaithu Parthen

 ஆண் : நினைத்து

நினைத்து பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்

உன்னால் தானே நானே

வாழ்கிறேன் ஓஹோ

உன்னில் இன்று என்னை

பார்க்கிறேன்


ஆண் : எடுத்து படித்து

முடிக்கும் முன்னே

எரியும் கடிதம் எதற்கு

பெண்ணே


ஆண் : உன்னால் தானே

நானே வாழ்கிறேன் ஓஹோ

உன்னில் இன்று என்னை

பார்க்கிறேன்


குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


ஆண் : அமர்ந்து பேசும்

மரங்களின் நிழலும்

உன்னை கேட்கும் எப்படி

சொல்வேன் உதிர்ந்து

போன மலரின் மௌனமா


ஆண் : தூது பேசும்

கொலுசின் ஒளியை

அறைகள் கேட்கும்

எப்படி சொல்வேன்

உடைந்து போன

வளையல் பேசுமா ஆ


ஆண் : உள்ளங்கையில்

வெப்பம் சேர்க்கும் விரல்கள்

இன்று எங்கே தோளில்

சாய்ந்து கதைகள் பேச

முகமும் இல்லை இங்கே


ஆண் : முதல் கனவு

முடிந்திடும் முன்னமே

தூக்கம் கலைந்ததே


ஆண் : நினைத்து

நினைத்து பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்

உன்னால் தானே நானே

வாழ்கிறேன் ஓஹோ

உன்னில் இன்று என்னை

பார்க்கிறேன்


ஆண் : பேசி போன

வார்த்தைகள் எல்லாம்

காலம் தோறும் காதினில்

கேட்கும் சாம்பல் கரையும்

வார்த்தை கரையுமா


ஆண் : பார்த்து போன

பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் கேள்விகள்

கேட்கும் உயிரும் போகும்

உருவம் போகுமா


ஆண் : தொடர்ந்து வந்த

நிழலும் இங்கே தீயில்

சேர்ந்து போகும் திருட்டு

போன தடயம் பார்த்தும்

நம்பவில்லை நானும் ஒரு

தருணம் எதிரினில்

தோன்றுவாய் என்றே

வாழ்கிறேன்

Comments

Popular posts from this blog

Kaadhal ennum thervezhuthi